தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களுக்கு மாணவர்கள் மே 24 முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது மதிப்பெண் பட்டியல் இன்று பிற்பகல் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மதிப்பெண் பட்டியலை பார்க்கலாம். அதேசமயம் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பதிவு எண் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் உங்களது மதிப்பெண்களில் மாற்றமில்லை என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.