இந்தியாவில் பெரிய பள்ளிகள் இருந்தாலும், உலகிலேயே மிகவும் விலை அதிகமான பள்ளி சுவிட்சர்லாந்தில் உள்ளது. அதன் பெயர் இன்ஸ்டிட்யூட் லே ரோஸே (Institut Le Rosey). இந்தப் பள்ளியில் படிக்க ஆண்டுக் கட்டணம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆகிறது. இந்தப் பள்ளியை “அரசர்களின் பள்ளி” என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், இங்குப் பல ராஜ குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கிறார்கள்.

​இந்தப் பள்ளிக்கு இரண்டு வளாகங்கள் உள்ளன. கோடையில் ஏரிக்கரையிலும், குளிர்காலத்தில் மலைகளிலும் என வருடம் முழுவதும் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் படிப்பார்கள். இங்கு 8 முதல் 18 வயதுள்ள சுமார் 450 மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு என இரண்டு மொழிகளிலும் படிக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற இந்தப் பள்ளி, அதிக கட்டணத்தால் மிகவும் பிரபலமாக உள்ளது.