பத்து ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்ட நாளிலிருந்து அது ஒரு சர்ச்சையான நாணயம் தான். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளால் அந்த நாணயம் செல்லாதது என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை என்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.