பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மறு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் 25ஆம் தேதிக்குள் வெளி மாநில பதிவு எண் கொண்ட அனைத்து பேருந்துகளையும் தமிழகத்தில் உடனடியாக மறுப்பதிவு செய்ய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அவகாசம் டிசம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.