தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை தமிழக அரசு ஏற்றதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இனிய ரேசனில் குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய் கிடைக்கும்.