தமிழகத்தில்  10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் பள்ளிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 20-ம் தேதி முதல் டவுன்லோட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத மாணவர்களின் பதற்றத்தை குறைப்பதற்காக தேர்வு அறையில் ஹால் டிக்கெட் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.