தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.