ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் நிருபர்களுக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அரசு தீர்ப்பளித்துள்ளது.