மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன் பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தற்போது துறை ரீதியான விசாரணையும் தொடங்கியுள்ளது.