தன் காலை உணவாக நமது மூதாதையரின் அருமருந்தான பழைய சோறு மாறி விட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதாவது, தாங்கள் மறந்திருந்த பழைய சோறு பற்றி நினைவூட்டியதற்கு நன்றி. தங்களுக்கு உள்ள பல வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இது தீர்வை தரும் என பல்வேறு முக்கிய பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பழைய சோறு முறைக்கு நிகராக பல மாநிலங்களில் உள்ள தண்ணி சாதம், வடிக்காத சாதம் ஆகிய உணவுப் பண்டங்களைப் குறித்தும் மக்கள் தகவல்களை பகிர்ந்து உள்ளனர். ஒடிசா உணவு, மேற்கு வங்க உணவு பற்றியெல்லாம் இங்கே பகிரப்பட்டு, தமிழர்கள் சிறிதுகாலமாக கொண்டாட மறந்துபோன உணவான பழைய சோறுக்கு மீண்டுமாக மவுசு ஏற்படும் அடிப்படையில் கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது.