வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும் ஊழியர்களின் கணக்குகளுக்கு மாற்றவில்லை.

இது ஊழியர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தான் நிதி ஆண்டுக்கான வட்டிக்கு (EPFO வட்டி) ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022ல் மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையிலான EPFO-ன் CBT, 2021-22-க்கு 8.1% வட்டிக்கு ஒப்புதல் அளித்தது. இது கடந்த 4 தசாப்தங்களில் மிகக்குறைந்த விகிதமாகும்.