மராட்டியத்தின் மும்பை நகரில் மின்சார அடிப்படையில் இயங்கும் போக்குவரத்து சேவை பெஸ்ட் என்னும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போக்குவரத்து சேவைக்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் விதமாக திறன் பெற்ற குளு குளு ஏசி வசதியுடன் கூடிய டபுள் டெக்கர் பஸ் வசதியை தொடங்க முடிவாகியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி இதற்காக சுவிட்ச் இ.ஐ.வி 22 என்ற பெயரிலான பஸ் ஒன்று பெஸ்ட் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்டிஓ அனுமதி இந்த பஸ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று முதல் பயணிகளுக்கான அதன் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே  மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி தொடங்கி வைக்கின்றார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் பகுதியில் இருந்து என்.சி.பி.ஏ பகுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என வாரத்திற்கு ஐந்து நாட்கள் இந்த பேருந்து இயக்கப்பட இருக்கிறது. இந்த இடைப்பட்ட தொலைவில் பயணிக்க ரூபாய் ஆறு கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாரம்பரிய சுற்றுலாவின் ஒரு பகுதியாக இயக்கப்படும். இதில் ஓட்டுநரை தவிர 54 பயணிகள் பயணம் செய்ய முடிகிறது. ஒருமுறை ஒன்றை முதல் 3 மணி நேரம் வரை சார்ஜ் செய்யப்பட்டால் 250 கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த பஸ் செல்லும். அதேபோல் மும்பையில் நாள்தோறும் 40 லட்சம் பயணிகள் பெஸ்ட் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தகுந்தாற்போல் போக்குவரத்து சேவை என்ற காரணத்தினால் இதுபோன்ற 900 மின்சார பேருந்துகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.