தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகம் அரசு ஐஏடி வளாகத்தில் ஜூலை 21 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி தகுதிக்கேற்ற சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.