தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் இரண்டு புகைப்படத்துடன் நேரில் சென்று தங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை இணையதளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் திருநெல்வேலி, கடலூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.