நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளுக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1997-1999-ல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தேவகி தலைமை தாங்கினார்.

பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மணியடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து முன்னாள் மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பின்னர் தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கௌரவித்து நினைவு பரிசுகளை கொடுத்தார்கள். இதனையடுத்து தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாடிய மைதானங்கள் ஆகியவற்றுக்கு குடும்பத்துடன் சென்று நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.