தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பால்ராஜ் சென்ற சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பால்ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.