மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாத்திமா அணிந்திருந்த சங்கிலி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.