சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.