தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மார்ட்டின் அரசு பள்ளியில்  11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மார்டின் தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மார்ட்டின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று மார்ட்டினை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக அவரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது பாறை இடுக்கில் சிக்கி இருந்த மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.