திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ரம்யா தம்பதி. இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் திமுக பிரமுகர் வளன்.எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் இவர் whatsapp கார்டில் அடிக்கடி பேசி தொந்தரவு செய்து வந்தவுடன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி ராஜேஷ்குமார் அவரின் மனைவி ரம்யாவும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு திமுக பிரமுகர் தம்பதியை திட்டி அடித்துள்ளார். அதே சமயம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது பற்றி ராஜேஷ்குமார் கொடுத்த புகாரியின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.