சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது விரிவு படுத்தியுள்ளது. இவ்வாறு விரிவு படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் மற்றும் 60 4 சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயன் அட்டையை பயன்படுத்தி தங்களுடைய வாகனத்தை ஏப்ரல் 28 முதல் மே 31 வரை எந்த கட்டணமும் இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.