மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

சென்னையில் மே 1ல் அனைத்து டாஸ்மாக் மற்றும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதேபோல்திருவண்ணாமலையிலும் அனைத்து டாஸ்மாக் & பார்களும் மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.