சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். உயர் நீதிமன்றத்தில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மனு தாக்கல், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும். பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் மற்றும் புதன் வியாழன் கிழமை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.