கன்னியாகுமரியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த சுஜின் மற்றும் வர்ஷா தம்பதிக்கு ஷகிப் செண்டினோ என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போக பெற்றோரும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பக்கத்து வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூடி திறந்திருந்ததை பார்த்தபோது சிறுவன் சடலமாக கிடந்தான். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.