வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரியால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலரும் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டும் தூங்கி வழிந்த படியும் இருந்துள்ளனர். குறிப்பாக அதிலும் ஒரு அதிகாரி குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.