திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய, பன்னாட்டு, உச்சி மாநாடுகளில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி என்று அரசிதழிழ் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.