உத்திர பிரதேசத்தின் லக்னோவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. ஜி 20 மாநாடு, சர்வதேச முதலீடாளர்கள் மாநாட்டிற்காக உத்தரப்பிரதேச அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லக்னோ விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் மேம்பாலம் விமான நிலையத்தை சுற்றிலும் அழகுப்படுத்தும் மேம்பாட்டு திட்டங்களை உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்ய நாத்  நேற்று திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் விமான நிலையத்தை சுற்றிலும் அழகு படுத்தும் திட்டத்தில் விமான நிலையத்திற்கு வெளியே இந்து மத கடவுள் லட்சுமணனின் 12 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்தனார் திறந்து வைத்துள்ளார். அப்போது லக்னோ தொகுதி எம்.பி ஆன மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்குமார் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.