தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலா துறை மந்திரியாக இருக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் சூரிய லங்கா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  ரோஜா கடலில் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை  ஓரமாக நடந்து சிறிது நேரம் அங்கு கழித்தனர். இந்நிலையில் கடல் நீரில் இறங்கிய போது ரோஜாவின் செருப்பை வேலைக்காரரின் கையில் கொடுத்து விட்டு சென்றிருக்கின்றார். தற்போது இது  சர்ச்சைக்குரிய  விஷயமாக மாறி உள்ளது. இது குறித்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து மந்திரியாக இருந்தாலும் ஊழியர் செருப்பை  சுமப்பதை ஏற்க முடியாது என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சூர்யா லங்கா சுற்றுலா தளத்திற்கு சென்ற ரோஜா சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆய்வுக் கூட்டத்தில் பாபட்டிலா சூரியலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. சூரிய லங்கா கடற்கரை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.