பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி எழு மனோகரா, பிஸ்தா மற்றும் சைத்தான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது உடல் நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.