தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய இந்த விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்து நொறுங்கி உள்ளது.

இதில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.