தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சர் ஆக யார் தேர்வாக போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்திருக்கிறார்.

அதன்படி தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி அடுத்த முதலமைச்சர் ஆக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் வருக ஏழாம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  54 வயதான ரேவந்த் ரெட்டி கல்லூரி காலத்தில் ABVP அமைப்பிலும்,

பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் சந்திர சேகராவுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்த அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவினுடைய காங்கிரஸின் முகமாக  அறியப்பட்டார். அவரை முன்னிறுத்தி தெலுங்கானாவில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அவர் தற்போது தெலுங்கானாவுடைய அடுத்த முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.