பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெராச்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தடகள வீரராக பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாலையில் ஓட்ட பயிற்சியில் சிறுமி ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது அவர்கள் சிறுமிக்கு போதைப் பொருளும் கொடுத்துள்ளனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.