விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி 650 பேருந்துகளும், செப்டம்பர் 16ஆம் தேதி 200 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.