தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.17 கோடி மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய திட்டமாக இருப்பதால் குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு விடுபட்ட அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.