தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு இன்னும் கொஞ்சம் வலிமையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சிவந்தி ஆதித்தனாரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பி விஜய் தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் ஒரு தனித்த பேரியக்கம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம். எங்கள் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் உடன் இணைந்து பயணிப்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.