கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் பலர் கர்நாடகாவுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில்  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நட்சத்திர பேச்சாளராக களம் இறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளார். IPS அதிகாரியான அண்ணாமலை கர்நாடகத்தில் பணியாற்றியவர். அவர் போலீஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் நிலையில் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி. அமித்ஷா ஆகியோரோடு நட்சத்திர பேச்சாளராக பாஜக அண்ணாமலையை அறிவித்துள்ளது