விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய  பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த  வழக்குகளை நெல்லை மாவட்ட குற்றப்பரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு அதிகாரியான அமுதா ஐஏஎஸ் பரிந்துரையின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சிலர் பெயர் என குறிப்பிடப்பட்டிருந்தது.