பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி, பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ் சத்யன் முன்னிலையில், அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.