ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது பெண் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில் அவருடைய மூத்த மகளும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி குழந்தையை தூங்கச் செய்த பிறகு பிற்பகலில் உறங்கியுள்ளார். மாலை எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. உடனே பதறி கொண்டு குழந்தையை தேட ஆரம்பித்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த வாழை தண்ணீரில் குழந்தை மூழ்கி இருந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது