வாரிசுகளால் தான் தமிழகம் வளர்கிறது எனவும் வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வியறிவு பெற்றுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் அறிவாற்றலிலும் முதலிடம் பெற வேண்டும். அனைவருக்கும் உயர் கல்வி என்பதே முக்கிய நோக்கம். ஆராய்ச்சி கல்வி வழங்குவதே அரசின் நோக்கமாக உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லாதவர்களையும் பள்ளி கல்லூரிகளுக்கு அழைத்து வருவது தான் திமுக அரசியல் நோக்கம். தமிழக மாணவர்கள் அனைவரும் அறிவாற்றலில் முதலிடம் வரவேண்டும் என்பதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எம் ஐ டி வளாகத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய ஏசி வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும். கற்றல் வளாக மற்றும் பவள விழா பூங்கா அமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.