தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள் மூலமாக நிதி உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற தளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக 45 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்