சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது. மோடியின் அடிமையாக அவர் மட்டுமே செல்வார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரில் நான்தான் சிறந்த அடிமை என்று எடப்பாடி பழனிச்சாமி வெற்றி அடைந்துள்ளார் என்று தெரிவித்தார். மேலும் மணிப்பூர் விவகாரத்தில் 5 நாட்களாக வாய் திறக்காமல் இருந்த பிரதமர் மோடி வேறு வழி இல்லாமல் பேசியுள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.