உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திரா யாதவ். இவரது மகன் ஹிமான்சு யாதவ் என்பவருக்கும் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது.

இந்நிலையில் மாணவரின் எண்ணிற்கு ஒரு பெண் போன்று மெசேஜ் அனுப்பி குறிப்பிட்ட இடத்திற்கு ஹிமான்சு மாணவரை வரவழைத்துள்ளார். பின்னர் அந்த மாணவரையும் அவருடன் வந்த நண்பரையும் கடத்தி சென்று பத்து பேர் கொண்ட குழு கடுமையாக தாக்கியுள்ளது.

இதில் ஹிமார்சுவின் தந்தை போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திர யாதவ் ஒருவர். மாணவனை கடுமையாக தாக்கியதோடு அவரது வாயில் ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்துள்ளனர். அதன் பிறகு மாணவனை சுயநினைவு இல்லாமல் ஒரு இடத்தில் விட்டுவிட்டு பத்து பேரும் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திர யாதவ் மற்றும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மீதம் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.