SBI வங்கிக் கணக்கில் இருந்து 295 பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக அவ்வப்போது பலர் புலம்புவதுண்டு. அது NACH என்ற அமைப்பின் சார்பாக உங்களுக்கு விதிக்கப்படும் அபராதம். லோன்களுக்கான EMI உள்ளிட்ட பல வசதிகள் மாதந்தோறும் தானாக Debit ஆகும் வசதியை NACH அளிக்கிறது.

அப்படி EMI தேதியில் உரிய பணம் அக்கவுண்டில் இல்லை என்றால் 250 அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு ஜிஎஸ்டி சேர்த்து 295 வசூலிக்கப்படுகிறது. பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வருவதால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.