புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசி மக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.