ஆந்திரா அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்ற மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து புதுமண தம்பதியினருக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வாலிபர் தன் மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார்.

மேலும் அந்த வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் மருமகனிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பஞ்சாயத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். அதோடு இதுபற்றி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமியார் புகாரளித்தார். இந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புது மாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர்.