திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் அடிப்படையில் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதற்கு தேவஸ்தானமானது முடிவு செய்துள்ளது. திருப்பதி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக மொத்தம் 10 இலவச பஸ்கள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் போன்றவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.