மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் 6 ஆயிரம் பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வைர மோதிரம், லேப்டாப் மற்றும் பை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.