கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூரு பனசங்கரி காவல் நிலையத்தை சேர்ந்த பத்மஜா (40), மதிப்பெண்கள் குறைவாக இருப்பது குறித்து தனது மகளிடம் (17) கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

கோபமடைந்த சிறுமி கத்தியை எடுத்து தாயை குத்தினார். பதிலுக்கு தாயும் கத்தியால் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பத்மஜா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது