வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 29ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே இன்றுக்குள் கேஒய்சியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் ihmcl.co.in என்ற இணையதளத்தில் லைசென்ஸ், ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை சமர்ப்பித்த புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.